தமிழகத்தில் போதுமான அளவில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கையை ஒருமுறை மட்டும் வெளியிட்டது அரசு. நாள்தோறும் மாவட்ட வாரியான சோதனை பட்டியலை வெளியிடுவதில் என்ன சங்கடம் என தெரியவில்லை. இந்திய அளவிலான பரிசோதனைகள் எண்ணிக்கையில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. எனவும் கூறினார்.